;
Athirady Tamil News

தனியார் பஸ் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு!

0

ஜாஎல – நீர்கொழும்பு 273 ஆவது வழித்தடத்தில் பயணிக்கும் தனியார் பஸ் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வெலிசறை டிப்போ அதிகாரிகள் குழுவொன்று தம்மை தாக்கியதாகக் கூறி திடீரென பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக அப் பகுதியில் பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டது.

இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.