;
Athirady Tamil News

வட இந்தியாவில் படிக்க சென்ற மருத்துவ மாணவர் மர்ம மரணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம்!

0

மருத்துவ மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் மரணம்
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் மதன்குமார் படித்து வந்தார். இவர் நவம்பர் 2-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த மாணவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், இவர் அங்கு தடயவியல் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்த அந்த மாணவரின் உடல் தீயில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், தகவல் அறிந்து வந்த ராஞ்சி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நிவாரணம்
இந்நிலையில், போலீஸ் விசாரணையில் அந்த மாணவரின் உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது மர்மாக உள்ளதும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மாணவர் மதன்குமாருக்கு இரங்கல் தெரிவித்து, மாணவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பின்னர், ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடிதம் எழுதி, மாணவர் மதன் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.