;
Athirady Tamil News

கொழும்பு பகுதியொன்றில் உள்ள வீட்டின் மீது குண்டுத் தாக்குதல்!

0

கொழும்பு – தெமட்டகொட வெலுவான பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான தெமட்டகொட ருவானின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் முன் வாயிலில் இரண்டு குண்டுகளும் தோட்டத்தில் ஒரு வெடிகுண்டும் வீசப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், தெமட்டகொட ருவன் புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.