;
Athirady Tamil News

கல்வி அலுவலக மலசலகூடத்தில் சடலம்

0

கம்பளை கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கம்பளை கல்வி அலுவலகத்தில் பணி உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மரண விசாரணை
உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கம்பளை மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.