;
Athirady Tamil News

விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து இளம் கபடி வீரர் மரணம்

0

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரெனெ மயங்கி விழுந்து கபடி வீரர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளையாடிய கபடி வீரர்
தமிழக மாவட்டமான புதுக்கோட்டை, மேட்டுபட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்கராஜ் (48) மற்றும் தமிழரசி (41). இவர்களுக்கு யோகேஸ்வரன் (19), சிவா (18) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.

இதில் யோகேஸ்வரன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கபடி விளையாட்டு வீரர் ஆவார்.

இந்நிலையில், நேற்று அன்னவாசல் அருகே மாங்குடியில் நடைபெற்ற கபடி போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கபடி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். அப்போது, யோகேஸ்வரனும் கலந்து கொண்டு விளையாடினார்.

கபடி வீரர் மரணம்
மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த லோகேஸ்வரன் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அன்னவாசல் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். விளையாடிக் கொண்டிருக்கும் போதே கபடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.