;
Athirady Tamil News

கனேடிய பிரதமரால் நியமிக்கப்பட்ட புதிய செனட்டர்

0

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் பிரின்ஸ் எட்வர்ட் தீவுக்கான புதிய செனட்டராக மேரி ராபின்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கனேடிய அரசினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உலக விவசாயிகள் அமைப்பின் துணைத் தலைவராக பணியாற்றும் மேரி ராபின்சன், பிரின்ஸ் எட்வர்ட் தீவின் செனட்டராக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘மேரி ராபின்சன் விவசாயத் துறையில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் என்றும் அவர் ஒரு பெருமைமிக்க அட்லாண்டிக் கனேடியன் என்றும் கூறப்பட்டுள்ளது.

6வது தலைமுறை
அதேவேளை, பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள 6வது தலைமுறை பண்ணை மற்றும் விவசாய வணிகமான ராபின்சன் குழுமத்தின் நிர்வாக பங்காளராகவுள்ளார்.

மேலும், மேரி ராபின்சனுக்கு, கனேடிய விவசாயக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மற்றும் அந்தப் பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையயும் காணப்படுகின்றது.

அத்துடன், அவர் கனடா முழுவதும் விவசாயத்தில் பெண்களுக்கு ஒரு உத்வேகமான தலைவராக பணியாற்றுகிறார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கனேடிய பிரதமரின் பதிவு
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் பதிவில், ‘இன்று, நாடாளுமன்றத்தின் புதிய சுதந்திரமான செனட்டராக மேரி ராபின்சனை வரவேற்கிறோம்.

விவசாயம் மற்றும் வணிகத்தில் அவரது அனுபவம் செனட்டிற்கு ஒரு முக்கியமான முன்னோக்கி கொண்டு வரப்போகிறது. அவருடன் பணிபுரிய ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.