;
Athirady Tamil News

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இருவர் உயிரிழப்பு

0

மட்டக்களப்பு – வாழைச்சேனை, ஈச்சையடி பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (13.2.2024) இடம்பெற்றுள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பிமலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரும், அவரது மருமகனான புலிபாய்ந்த கல்லைச் சேர்ந்த 21 வயதுடைய நபரும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான குறித்த பண்ணையை வாழைச்சேனையைச் சேர்ந்த நபர் ஒருவர் குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.