;
Athirady Tamil News

தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் குழப்பநிலை: இரும்பு வேலிகள் உடைப்பு

0

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் இன்று பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளை வழங்குமாறு கோரி இரசிகர்கள் அங்குள்ள தற்காலிக இரும்பு வேலிகளை உடைத்து குழப்பத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அடுத்த இரண்டு போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே டிக்கெட்டுகளை வாங்க முயற்சிப்பதை தவிர்க்குமாறு இலங்கை கிரிக்கெட் சபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.