;
Athirady Tamil News

இயந்திர வாக்குப்பதிவு மூலம் மாப்பிள்ளையாக பார்க்கிறார் பிரதமர் மோடி – மன்சூர் அலிகான்!

0

பிரதமர் மோடி 3-வது முறையும் மின்னணு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்தி மாப்பிள்ளை ஆக பார்ப்பதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயக புலிகள்
நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் முதல் மாநாடு பல்லாவரத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்துவது, மது, கஞ்சா, போதைப் பொருள் ஒழிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில் “வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி சில கட்சிகளுடன் பேசி வருகிறோம்.

மோசடி நடைபெறுகிறது
மின்னணு இயந்திர வாக்குப்பதிவு மூலம் 2 முறை மாப்பிள்ளை ஆகிவிட்டார் பிரதமர் மோடி. 3-வது முறையும் மின்னணு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்தி மாப்பிள்ளை ஆக பார்க்கிறார்.

எந்திர வாக்குப்பதிவில் மோசடி நடைபெறுகிறது. மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு தேர்தல் நடத்த வேண்டும். இந்தியாவிலும், நைஜீரியாவிலும் தான் எந்திர வாக்குப்பதிவு உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.