;
Athirady Tamil News

குடும்பத்தில் உள்ள அனைவரும் விபரீத முடிவு.., மதுரையில் சோகம்

0

ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் என நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் மனைவி இடையே தகராறு
தமிழக மாவட்டமான மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இவர், மனைவி வீரசெல்வி, மகள்கள் தனுஸ்ரீ (13 ), மேகா ஸ்ரீ (8) உடன் வாழ்ந்து வந்தார்.

இவரது மனைவி வீர செல்விக்கு ஆசிரியர் பணி கிடைத்த நிலையில் மதுரை அனுப்பானடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இதில் கணவர் வேலையை விட்டதால் மனைவியிடம் மது அருந்திவிட்டு அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால், கணவர் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

4 பேரும் உயிரிழப்பு
இந்நிலையில், திடீரென சிலைமான் பகுதியில் வைகையாற்று கரையோரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் செந்தில்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை பொலிஸார், அவரது மனைவியிடம் தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி வீட்டினுள் பூட்டிக்கொண்டு இன்று காலை வரை வெளியில் வரவில்லை. பின்னர், ஜன்னல் வழியே பார்த்த போது வீரசெல்வி அவரது 2 மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய பொலிஸார் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.