;
Athirady Tamil News

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கேட் மிடில்டன்! இளவரசர் வில்லியமுடன் பண்ணைக்கு வந்த இளவரசி

0

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் பொது வெளியில் தோன்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சையான இளவரசி கேட் உடல்நிலை
சமீபத்தில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் வயிற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து அவர் ஓய்வெடுத்து வருவதாகவும், விரைவில் பொது வெளியில் தோன்றுவார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு வேல்ஸ் இளவரசி பொதுவெளியில் தோன்றாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

அத்துடன் சமீபத்தில் அன்னையர் தினத்தில் இளவரசர் வில்லியம் தவிர்த்து குழந்தைகளுடன் கேட் மிடில்டன் இருக்கும் புகைப்படம் ஒன்றை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டது.

இந்தப் புகைப்படமும் பொது வெளியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் இளவரசர் வில்லியமுடன் பண்ணை கடை ஒன்றுக்கு சென்றிருக்கிறார்.

கடைக்கு சென்று திரும்பிய கேட் மிடில்டன் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், இளவரசி கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் விண்ட்சர் அருகில் அடிலைடு காட்டேஜ் அருகில் உள்ள பண்ணை கடைக்கு வந்துள்ளனர்.

அதற்கு முன்னதாக அவர்களது குழந்தைகள் கலந்து கொண்ட விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.