;
Athirady Tamil News

கனடாவில் திருடனால் ஏற்பட்ட கோர விபத்து:நால்வர் உயிரிழப்பு

0

கனடாவின் பவுமான்வெல் பகுதியில் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற போது இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் வயது முதிர்ந்த தம்பதியினரும், பேரப்பிள்ளையும், விபத்தினை மேற்கொண்ட சந்தேகநபர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

ஆறு வாகனங்களுடன் மோதுண்டு விபத்து
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மதுபானசாலையொன்றில் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை காவல்துறையினர் துரத்திச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த சந்தேக நபர் அதிவேக நெடுஞ்சாலையின் பிழையான திசையில் வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.

இதன்போது எதிரில் வந்த ஆறு வாகனங்களுடன் மோதுண்டதனால் விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்தில் மற்றுமொரு நபர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.