;
Athirady Tamil News

நிஜ்ஜார் கொலை வழக்கில் சிக்கிய இந்தியர்கள்: கனேடிய பிரதமர் பெருமிதம்

0

கனடாவில்(Canada) ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(Hardeep Singh Nijjar) கொலை தொடர்பாக மூவர் கைதான விடயம் குறித்து அந்நாட்டு பிரதர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) கருத்து தெரிவித்துள்ளார்.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்( கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் இந்தியாவிற்கும்(India) தொடர்பு இருப்பதாக பிரதர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதன் காரணமாக இந்திய – கனடா உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது.

குடிமக்களின் பாதுகாப்பு
இந்நிலையில், குறித்த கொலை வழக்கு தொடர்பில், மூன்று இந்தியர்கள் கனடா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பிரதர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், இது முக்கியமான விடயம். ஏனென்றால் கனடா வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட ஒரு சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாடாகும்.

அத்துடன், நாட்டின் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்கான அடிப்படை அர்ப்பணிப்பு கொண்டுள்ள நாடு” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.