;
Athirady Tamil News

4 கிரகணங்களும் ஒரே நேர்கோட்டிற்கு வருவதால் ஆளுங்கட்சிக்கு சாதகம்: பிரபல ஜோதிடர் கணிப்பு

0

சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய 4 கிரகணங்களும் ஒரே நேர்கோட்டிற்கு வருவதால் ஆளுங்கட்சிக்கு சாதகம் என்று பிரபல ஜோதிடர் கண்டித்துள்ளார்.

ஜோதிடர் கூறியது
ஜூன் மாதம் 3 -ம் திகதி இந்த 4 கிரகணங்கள் ஒரே நேர்கோட்டிற்கு வருவது குறித்து பிரபல ஜோதிடர் கூறுகையில், “சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகியவை மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றனர்.

இதனால், இந்த 4 கிரகணங்களும் ஒரே வீட்டில் இருப்பதால் எதிர்க்கட்சிகளுக்கு போட்டியான காலமாகவும், ஆளும் கட்சிக்கு சாதகமாகவும் ஏற்படுத்தி தருகிறது.

அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். அரசியல் கட்சி பிரமுகர்கள் இடமாறுதல் செய்யலாம். வெயிலின் தாக்கமும் அதிகரிக்கும்.

தென்மேற்கு பருவமழை உற்பத்தியாகி வெயில் தாக்கத்தை குறைக்கும். ஜூன் 15 -ம் திகதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும்.

மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ கல்வி படிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும் . தங்கத்தின் விலை ஏறும். நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும்.

வட மாநிலங்களில் வெள்ளம் அதிகரிக்கும். சிலருக்கு புற்றுநோய் ஏற்படும். கேதார்நாத், பத்ரிநாத், ஹரித்துவார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும்” என்று கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.