;
Athirady Tamil News

யாழ் மாவட்டசெயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு

0

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் தின நிகழ்வு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (23.05.2024) மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ அவர்கள் கலந்துகொண்டு வெசாக் தினம் தொடர்பாக ஆசியுரை வழங்கியபோது “உலகத்தின் அனைத்து மக்களினதும் கௌரவம், பாதுகாப்பு, உரிமை என்பவற்றை மையமாக கொண்டதே புத்த பெருமானின் தர்ம போதனை. இது உலகத்தில் உள்ள எல்லா மக்களுடைய சாந்தி, சமாதானம் நல்லிணக்கத்தை போதிக்கின்றது.

புத்த தர்மத்தில் எல்லா மக்களும் சமம் என்பதையே புத்த பெருமானின் போதனை உணர்த்துகின்றது.
இலங்கை வாழ் மக்களாகிய நாம் ஒற்றுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று இந்த வெசாக் பௌர்ணமி தினத்தில் ஆசீர்வாதம் செய்வதாகவும்” அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் யாழ் பிராந்திய இராணுவகட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க , வடமாகாண கடற்படை உயர்அதிகாரி ரோஹித அபேசிங்கே , யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜெயசிங்க, விமானப்படை கட்டளைத்தளபதி ( Group Captain ) H.M.C.ஹேரத், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகன், பிரதம கணக்காளர் என்.எஸ்.ஆர்.சிவரூபன், உதவி மாவட்ட செயலாளர் உ.தர்சினி ,பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.