;
Athirady Tamil News

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் அனுப்பும் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள், நாட்டிற்கு அனுப்பும் தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்களால் நவம்பர் மாதம் 530.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

வீழ்ச்சி
இந்த தொகை கடந்த அக்டோபர் மாதம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது நவம்பர் மாதம் வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் அனுப்பும் தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் கடந்த வருடம்(2023) நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போதும் இந்த தொகையில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.