;
Athirady Tamil News

கோவையில் அரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்!

0

கடும் பனி மூட்டம் காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல் விமானம் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்தது.

கோவையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் விமான சேவையில் அங்கு பாதிப்பு ஏற்பட்டது.

மும்பையில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா விமானம், கடும் பனி மூட்டம் காரணமாக, தரையிறங்க முடியாமல் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்து பின்னர் தரையிறங்கியது.

அதேபோல தில்லியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் கொச்சின் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

சென்னையிலும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னைக்கு வரவேண்டிய ரயில்கள், விமானங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே செல்லும் ரயில்கள், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விரைவு ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.