கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி அமல்ராஜ் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா

யாழ், கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக கடமையாற்றி வவுனியா மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் இ.கி அமல்ராஜ் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு நேற்று(03.03.2025) நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ.நளாஜினி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி அமல்ராஜ் மற்றும் அவரது பாரியார் அ.கோகுலவதனா ஆகியோர் மாலையணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களால் உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி அமல்ராஜ் அவர்களின் சிறந்த சேவைகளுக்கு பாராட்டும் புகழாரமும் தெரிவித்ததுடன், இவரின் பணி மென்மேலும் சிறக்க
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் பொன்னாடை போர்த்தியும், மலர்மாலை அணிவித்தும் நினைவுச் சின்னங்கள் வழங்கியும் உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி அமல்ராஜ் அவர்களை உத்தியோகத்தர்கள் கௌரவித்தனர்.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ.நளாஜினி, மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சிவராசா, கிளைத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தேர்தல்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.