திபெத்தில் தொடர் நிலநடுக்கம்…! பீதியில் மக்கள்!

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 01.42 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, நேற்று காலை 8 மணியளவில் அதேபோன்ற 10 கி.மீ. ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும் முன்னரே, மதியம் 2.07 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவல்களும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
EQ of M: 4.3, On: 13/03/2025 14:07:22 IST, Lat: 28.96 N, Long: 87.48 E, Depth: 10 Km, Location: Tibet.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/W47r0jkHqJ— National Center for Seismology (@NCS_Earthquake) March 13, 2025
இந்நிலையில், இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் இணையும் பிளவுக்கோட்டில் திபெத் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் நிலப்பரப்பு அமைந்துள்ளதினால் அங்கு எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் எனும் அபாயமுள்ளது.
மேலும், தற்போது நிகழ்ந்துள்ளதைப் போன்ற ஆழமற்ற நிலநடுக்கங்கள், பூமியின் மேற்பரப்புக்கு அருகில் அதிக ஆற்றலை வெளியிடுவதினால் ஆழமானவற்றை விடவும் ஆபத்தானவை எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களினால் பின் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த மார்ச். 4 அன்று திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.