;
Athirady Tamil News

விசா விதிகளை கடுமையாக்கிய பிரித்தானியா: மாணவர்கள், தொழிலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

0

பிரித்தானிய அரசு புதிய விசா விதிகளை அறிவித்துள்ளது.

இந்த விதிகளின் அடிப்படையில் பராமரிப்பு பணியாளர்கள், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய விதிகள்
ஏப்ரல் 9 முதல், வெளிநாட்டிலிருந்து பராமரிப்பு பணியாளர்களை நியமிக்க விரும்பும் நிறுவனங்கள், முதலில் பிரித்தானியாவில் உள்ளவர்களையே வேலைக்கு அமர்த்த முயற்சி செய்ய வேண்டும்.

ஆள்சேர்ப்பில் வெளிநாட்டைச் சார்ந்திருக்கும் நிலை குறைய, உள்நாட்டிலுள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான புதிய விதிகள்
திறன் வாய்ந்த தொழிலாளர் விசாவிற்கான (Skilled Worker visa) குறைந்தபட்ச ஊதியம் £23,200-லிருந்து £25,000-ஆக அதிகரிக்கபட்டுள்ளது.

இதனால் பிரித்தானிய தொழிலாளர்களுக்கு உயர்ந்த சம்பளம் உறுதி செய்யப்படும்.

மாணவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்
குறுகிய கால மாணவர் விசா (short-term student visa) பெற உண்மையான மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

6 முதல் 11 மாதங்களுக்கு ஆங்கிலம் பயில வரும் வெளிநாட்டு மாணவர்களின் விசா கோரிக்கைகள் பத்திரமாக பரிசீலிக்கப்படும்.

மாணவர் விசா முறைகேடுகள் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

புதிய விதிகளின் விளைவு
2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு (2024) 395,100 வேலை/கல்வி விசாவிற்கான விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.

வெளிநாட்டு மருத்துவ பணியாளர்கள், பராமரிப்பு பணியாளர்களின் விண்ணப்பங்கள் 79% குறைந்துள்ளன.

மொத்தமாக, 42 சதவீத விசா விண்ணப்பங்கள் குறைந்துள்ளன, இது புதிய சட்டங்களின் தாக்கமாக பார்க்கப்படுகிறது.

இந்த புதிய கட்டுப்பாடுகள், பிரித்தானியாவில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதை முதன்மையாகக் கொண்டுள்ளன என்றும் விசா முறைகேடுகளை தடுக்க முயல்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.