வாகன விபத்தில் சிக்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி

குருநாகல் நிகவெரட்டியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்றையதினம் (08.04.2025) நிகவெரட்டிய, ரஸ்நாயக்கபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த வான் ஒன்று, பொலிஸ் தடுப்பு வேலியில் மோடியதாலேயே விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த பொலிஸ் தடுப்பு வேலியில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.