ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவு

வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றத்தில் மேலும் ஒரு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹசீனாவின் பதவிக் காலத்தில் டாக்காவுக்கு வெளியே முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரையும் அவரின் மகன் சஜீப் வாஜித் மற்றும் 16 பேரையும் கைது செய்ய டாக்கா பெருநகர நீதிமன்றம் இந்த உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது.
மாணவா் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் தஞ்சமடைந்தாா். அதில் இருந்து அவா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுவருகின்றன.