;
Athirady Tamil News

மின்னல் தாக்கி வயலில் நின்றவர் பலி

0

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவின் விஜயபுர பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் துயர சம்பவம் நேற்று (14 ) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் விஜயபுர, தமனேவெல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார். இறந்தவர் வயலில் நெல் விதைக்கும் போது மின்னல் தாக்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.