;
Athirady Tamil News

பிள்ளைகளுக்காக குடும்பப் பெயரையே மாற்றிக்கொள்ள திட்டமிட்ட இளவரசர் ஹரி

0

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும், தங்கள் பிள்ளைகளுக்காக தங்கள் குடும்பப் பெயரையே மாற்றிக்கொள்ள முடிவு செய்ததைக் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

குடும்பப் பெயரையே மாற்றிக்கொள்ள திட்டமிட்ட ஹரி
ஹரியும் மேகனும், தங்கள் பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுக்கு பிரித்தானிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்துள்ளார்கள்.

ஆனால், பிரித்தானிய அதிகாரிகள் பாஸ்போர்ட் வழங்காமல் இழுத்தடித்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில், ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டின் பெயர்களுடன் His/Her Royal Highness என்னும் பட்டமும், சசெக்ஸ் என்னும் குடும்பப் பெயரும் இடம்பெற்றிருந்தன.

அதனால்தான் பிள்ளைகளின் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதை அதிகாரிகள் தாமதம் செய்கிறார்களோ என்ற எண்ணம் ஹரிக்கு உருவாகியுள்ளது.

ஆகவே, பேசாமல் தங்கள் குடும்பப் பெயரை தன் தாயின் குடும்பப் பெயரான ஸ்பென்சர் என மாற்றிக்கொள்ளலாமா என ஹரி யோசித்துள்ளார். அந்த முடிவுக்கு டயானாவின் சகோதரும் ஆதரவாக இருந்துள்ளார்.

இதற்கிடையில், ஹரியின் சட்டத்தரணிகள், தனியுரிமைச் சட்டத்தின்கீழ், தரவு பொருள் அணுகல் கோரிக்கை (DSAR) விடுக்க இருப்பதாக எச்சரிக்க, அவசர அவசரமாக பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, தரவு பொருள் அணுகல் கோரிக்கை விடுத்தால், பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் வழங்க தாமதம் செய்ய காரணம் என்ன, அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்னும் உண்மைகள் வெளியே வந்துவிடும். ஆகவேதான் ஹரியின் பிள்ளைகளுக்கு அவசர அவசரமாக பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

என்றாலும், ஆறு மாதங்களுக்குப் பின்னரே ஆர்ச்சிக்கும் லிலிபெட்டுக்கும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக, பாஸ்போர்ட் வழங்க அதிகபட்சமாக மூன்று வாரங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.