;
Athirady Tamil News

கஞ்சாவுடன் தையிட்டி விகாரைக்கு வந்த தென்னிலங்கை இளைஞன் விளக்கமறியலில்

0

தென்னிலங்கையில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் தையிட்டி விகாரையை வழிபட வந்த இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தையிட்டியில் சட்டவிரோதமான கட்டப்பட்டுள்ள விகாரையில் நடைபெற்ற பொசன் சிறப்பு வழிப்பாட்டிற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை வந்த இளைஞன் ஒருவர் விகாரையை அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார்

அதனை அவதானித்த பலாலி பொலிஸார் இளைஞனை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியமையால் இளைஞனை சோதனையிட்ட போது ம் உடைமையில் இருந்து கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்

அதனை அடுத்து இளைஞனை கைது செய்து , விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் முன்னிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்படுத்திய போது, இளைஞனை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.