;
Athirady Tamil News

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக 28 பேர் சாட்சி

0

பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன், அரச தரப்பு சாட்சிகளாக சுமார் 28 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

நாடாளுமன்ற அறிக்கையின்படி, நேற்று(198) விசாரணைக் குழுவின் முன் அரச தரப்பு சாட்சிகள் 07 பேர் சாட்சியமளித்தனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் மற்றும் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜித பெரேரா ஆகியோர், இந்த இரண்டு சாட்சிகளும் உத்தியோகபூர்வ வேலைகளுக்காக வெளிநாட்டில் இருப்பதாகவும், ஜூன் 26 அன்று நாடு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து அடுத்து, ஜூன் 26 ஆம் திகதிக்குப் பின்னர் சாட்சியமளிக்க இரண்டு கூடுதல் சாட்சிகளையும் குழு அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.