;
Athirady Tamil News

ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவிக்கப்படவுள்ள வடக்கு மாணவர்கள்

0

கடந்த 2023-2024 ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களைக் கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இதன் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாளை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், மாவட்டத்தில் மட்டத்தில் சிறந்த பெபேறுகளைப்பெற்ற 60 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, நிதிப் புலமைப்பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.