;
Athirady Tamil News

நிலநடுக்கத்திற்கு முன்பே கரை ஒதுங்கிய பெரிய திமிங்கலங்கள்

0

ஜப்பான் கடலோர பகுதிகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், அச்சத்தின் நடுவே நான்கு பெரிய உருவிலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

இதேவேளை, ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவான மிகச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்த பகுதியில் முந்தைய நாட்களில் ஏற்பட்டுள்ளது.

அதிசயமாக, இந்த திமிங்கலங்கள் நிலநடுக்கம் நிகழ்வதற்கு முன்பே கரையை வந்தடைந்துள்ளன எனப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இது, மூலஜீவிகள் இயற்கை அச்சங்களை உணரும் திறன் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவை ஏன் கரைக்கு வந்தன? எனும் கேள்வி இன்னும் பதிலின்றி உள்ளது.

இது வரலாற்றில் 6-வது பெரிய நிலநடுக்கம் என அமெரிக்க புவியியல் மையம் (USGS) உறுதி செய்துள்ளது. அதனால் ஜப்பானின் துறைமுகங்கள், கட்டிடங்கள், கடலோர பகுதிகள் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன.

பெரிய கடலலைகள் கரையை நோக்கி பாயும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. இதேவேளை, ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவில் 8.7 எனப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின், ஜப்பான், அமெரிக்கா மற்றும் பசிபிக் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ரஷியாவின் சகாலின் பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர கட்டிடங்கள் சுனாமி அலையில் அடித்து செல்லப்பட்டதாகவும், வெள்ளம் பெருகிய வீடியோக்கள் இணையத்தில் பரவியுள்ளன.

மேலும், ஹவாய், பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக் மற்றும் கொஸ்ரே பகுதிகளில் 1 முதல் 3.3 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகள், புவியின் இயற்கை துயரம் மீண்டும் ஒருமுறை மனிதகுலத்துக்கு எச்சரிக்கையாகவும், காலநிலை மாற்றம் மற்றும் புவியியல் கண்காணிப்பின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.