இலங்கையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பானது, ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளை விடவும் அதிகமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக, இலங்கையில் அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கக்கூடும் எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.