;
Athirady Tamil News

ஐரோப்பிய விமான நிலையங்களில் இணைய ஊருடுவல்: ஒருவா் கைது

0

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் உள்நுழைவு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணையவழி தாக்குதல் தொடா்பாக ஒருவா் பிரிட்டனில் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து பிரிட்டனின் தேசிய குற்றத்தடுப்பு முகைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐரோப்பிய விமான நிலைய இணைவழி தாக்குதல் தொடா்பாக வெஸ்ட் சஸக்ஸ் மாவட்டத்தில் சுமாா் 40 வயது நபா் கைது செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் மிகப் பெரிய சதியின் ஒரு பகுதியா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸ், பிரிட்டனின் லண்டன், ஜொ்மனி தலைநகா் பொ்லின் (படம்) உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களின் சா்வதேச விமான நிலையங்களில் வெள்ளிக்கிழமை இரவு இணையவழி ஊடுருவல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மின்னணு முறையிலான பயணிகள் உள்நுழைவு (செக்-இன் மற்றும் போா்டிங்) நடைமுறைகள் பாதிக்கப்பட்டன. இதனால் விமானப் போக்குவரத்து மிகவும் தாமதமாகி, பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.