;
Athirady Tamil News

படகில் களியாட்டத்தால் பறிபோன உயிர்

0

தங்காலை கடலில் படகு ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (15) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர் ஆவார்.

குறித்த நபர் நண்பர்களுடன் இணைந்து படகு ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டுள்ள நிலையில் படகிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.