பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட கல்மேகி புயல்; 140 பேர் பலி..130 பேரை காணவில்லை
பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட கல்மேகி புயல் காரணகம 140 பேர் பலியான நிலையில் 130 பேரை காணவில்லை என்றும் அந்நாட்டு தகவல்கள் கூறுகின்றன.
கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தால் இதுவரை 140 பேர் உயிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை.
செபு மாகாணம் அடங்கிய பிராந்தியத்தை புயல் கடந்த பிறகு கார்களும், ஆற்றங்கரையோர வீடுகளும் மற்றும் கண்டெய்னர்களும் கூட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பிலிப்பைன்ஸில் வசித்த 5 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர்.
இந்நிலையில் பேரழிவு ஏற்பட்டதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ் நெருக்கடி நிலை பிரகடனம் செய்துள்ளார்.