திருகோணமலைக்கு ஞானசார தேரர் விஜயம்; பொலிஸார் மீது பாச்சல்
பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.
திருகோணமலைப் பகுதியில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அமலாக்க நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்ட பதட்டங்களைத் தொடர்ந்து, அவர் திருகோணமலைக்கு சென்றுள்ளார்.
ஊடகவியளாளர்களிடம் ஞானசார தேரர் பேசுகையில், பொலிசாரின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்தார்.
பொலிஸ் அதிகாரிகள் பௌத்த சமூகம் மற்றும் விகாரையின் நடவடிக்கைகளுக்கு மரியாதைக்குறைவான முறையில் நடந்துகொண்டதாகவும் அ தேரர் குற்றம் சுமத்தினார்.