;
Athirady Tamil News

சிறுவயதில் கொலை மிரட்டல் – 20 ஆண்டுகளாக வீட்டுக்குள் இருந்த சிறுமி பார்வைக் குறைவுடன் மீட்பு

0

பஸ்தார்: சத்​தீஸ்​கர் மாநிலம் பஸ்​தார் மாவட்​டம் பகாவந்த் கிராமத்​தைச் சேர்ந்​தவர் லிசா. இவர் கடந்த 2000-ம் ஆண்​டில் தனது 6 வயதில் அங்​குள்ள பள்​ளி​யில் 2-ம் வகுப்பு படித்​துள்​ளார்.

அப்​போது அவரது கிராமத்​தைச் சேர்ந்த ஒரு​வர் லிசாவை கொன்​று​விடு​வேன் என மிரட்​டி​யுள்​ளார். அவரது பேச்சை கேட்டு மிக​வும் பயந்​து​போன சிறுமி வீட்​டை​விட்டு வெளி​யேற​வில்​லை. இந்நிலையில் அவரது தாயும் இறந்​து​விட்​டார். அந்த சிறுமியை பார்த்​துக் கொள்ள யாரும் முன்​வர​வில்​லை. இதனால் அவரது தந்தை லிசாவை அவர்​களது மண் குடிசை வீட்​டுக்​குள் பூட்​டி​விட்டு சென்​று​விடு​வார்.

அந்த வீட்​டில் ஜன்​னல் எது​வும் இல்​லாத​தால் இருட்​டாகவே இருந்துள்​ளது. அவரது தந்தை வீட்டு வாசலில் உணவை மட்​டும் வைத்​து​விட்டு சென்​று​விடு​வார். இப்​படி​யாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் வீட்​டுக்​குள்​ளேயே லிசா முடங்கி கிடந்துள்ளார். இது அவரது உடல் வளர்ச்​சி, மன வளர்ச்​சியை பாதித்து கண் பார்​வையை​யும் பாதித்​துள்​ளது.

இது குறித்து தகவல் அறிந்த சமூக நலத்​துறை அதி​காரி​கள், அந்த சிறுமியை மீட்டு ஜக்​தல்​பூர் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்த்​துள்​ளனர். லிசாவை பெயர் சொல்லி அழைத்​தால்​கூட அவரால் புரிந்து கொள்​ள​முடிய​வில்​லை. ஏதாவது சத்​தத்தை கேட்​டாலும், யாராவது தொட்​டாலும் அவர் பயப்​படு​கிறார்.

அவரது உடல்​நிலையை ஆராய்ந்த மருத்​து​வக் குழு​வினர், அவரால் வெளிச்​சத்தை பார்க்க முடி​யாது. இருளி​லேயே அவர் வாழ்ந்​த​தால் அவரது பார்வை மிக மோச​மாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது என்​றனர். அவரது மனவளர்ச்​சி​யும் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தால், அவர் சிறுமியை போன்றே நடந்து கொள்​கிறார்.

இச்​சம்​பவம் குறித்த விசா​ரணைக்கு சமூக நலத்​துறை உத்​தர​விட்​டுள்​ளது. இதன் விசா​ரணை அறிக்கை வந்​தவுடன் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாவட்ட அதி​காரி​கள் தெரிவித்​தனர். லிசா தற்​போது கராண்டா ஆசிரமத்​தில் வசிக்​கிறார். அவரை அங்​குள்ள பணி​யாளர்​கள் நன்கு கவனித்​துக் கொள்கின்றனர்​

You might also like

Leave A Reply

Your email address will not be published.