;
Athirady Tamil News

கிறிஸ்துமஸ் தினத்தில் கைதான 322 பேர்!

0

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று (25) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ​​மதுபோதையில் வாகனம் செலுத்திய 322 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, பொலிஸார் 29,539 பேரை சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில், 179 சந்தேக நபர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததோடு 88 பேருக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அதேசமயம் நேற்று மட்டும் 4,414 போக்குவரத்து குற்றங்கள் பதிவாகியுள்ள நிலையில், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காக 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.