ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம்; பிரித்தானியப் பிரதமரின் தலைமைத் தளபதி விலகல்
பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமைத் தளபதி மோர்கன் மெக்ஸ்வீனி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் லோர்ட் மண்டெஸ்லோன் உடனான தொடர்பு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெப்ரி எப்ஸ்டீனுடன், லோர்ட் மண்டெஸ்லோன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்ததாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.