;
Athirady Tamil News

உங்கள் தலைக்கு மேல் ஏவுகணைகள் பறப்பது; துபாயிலிருந்து திரும்பிய பிரித்தானியர்கள்

0

துபாயில் சிக்கியிருந்த பிரித்தானியர்கள் சிலர் எகிப்து வழியாக தாயகம் வந்தடைந்தனர்.

கெய்ரோ வழியாக
ஓமானின் மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட டைட்டன ஏர்வேஸ் விமானத்தில் துபாயில் சிக்கிய பிரித்தானியர்கள் பயணித்தனர்.

அரசாங்கத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த விமானம் எகிப்தின் கெய்ரோ வழியாக பயணித்து, வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 12.53 மணிக்கு எசெக்ஸின் Standsted-யில் தரையிறங்கியது.

அதில் பயணித்தவர்களில் சிலர் வீட்டிற்கு நீண்ட பயணம் ‘அதிர்ச்சிகரமானது’ என்று கூறினர்.

உங்கள் தலைக்கு மேல் ஏவுகணைகள்
‘நீங்கள் விடுமுறைக்கு செல்லும்போது, உங்கள் தலைக்கு மேல் ஏவுகணைகள் பறப்பது நீங்கள் எதிர்பார்க்கும் ஒன்றல்ல, அதுதான் அது. இப்போது நாங்கள் திரும்பி வந்துள்ளோம்’ என ஒரு தம்பதியர் தெரிவித்தனர்.

இதற்கிடையில் புதன்கிழமை புறப்படவிருந்த முதல் விமானம் ‘தொழில்நுட்ப சிக்கல்கள்’ காரணமாக நிறுத்தப்பட்டதாக வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் நேற்று டெய்லி மெயில் இடம் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.