;
Athirady Tamil News

நாடொன்றின் எல்லையில் குவிக்கப்படும் இஸ்ரேலிய டாங்கிகள்: வலிமையைக் காட்டும் நெதன்யாகு

0

லெபனான் எல்லையில் இஸ்ரேல் தனது இராணுவ டாங்கிகளை குவித்து வருகிறது.

நெதன்யாகு சபதம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் கிழக்குப் போரில் பல ஆச்சரியங்களை உருவாக்குவதாக சபதம் செய்தார்.

பெய்ரூட் மற்றும் தெஹ்ரானில் உள்ள எண்ணெய் சேமிப்பு வசதிகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், லெபனான் நாட்டின் வடக்கு எல்லையில் இன்று ஏராளமான இஸ்ரேலிய டாங்கிகள் காணப்பட்டன.

உறுதிப்படுத்தும் நடவடிக்கை
இராணுவ வீரர்கள் மலையில் தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இருப்பதை காண முடிகிறது.

இஸ்ரேல் தனது இராணுவ சக்தியை பிராந்தியத்தில் உள்ள எதிரிகளுக்கு எதிராக தொடர்ந்து வலிமையை காட்டி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை உள்ளதாக தெரிய வருகிறது.

இஸ்ரேலிய தலைவர் தனது வீடியோ அறிக்கையில், தமது நாடுகள் (ஈரானிய) ஆட்சியை (மற்றும்) மாற்றத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.