;
Athirady Tamil News

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அஹிம்சைப் போராட்டம் ; ஒரே நாளில் 3,300 இடங்களில் டிரம்ப் மீது கடும் எதிர்ப்பு

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் மற்றும் அவரது நிர்வாகப் போக்கைக் கண்டித்து, கடந்த மார்ச் 28 சனிக்கிழமை அன்று ‘No Kings’ என்ற பெயரில் அமெரிக்கா முழுவதும் பிரம்மாண்டமான போராட்டங்கள் நடைபெற்றன.

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் சுமார் 3,300-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் சுமார் 80 லட்சம் மக்கள் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நாளில் நடைபெற்ற மிகப்பெரிய அஹிம்சைப் போராட்டமாக இது அமெரிக்க வரலாற்றில் பதிவு செய்யப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

ஈரான் மீது கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் இராணுவத் தாக்குதல்கள், குடியேற்றக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் ICE (Immigration and Customs Enforcement) அமைப்பின் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக மதிப்புகளை பாதிக்கும் வகையில் அதிகாரத்தைப் பயன்படுத்துவதாக டிரம்ப் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆகியவை இந்தப் போராட்டங்களுக்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

மினசோட்டா மாநிலத்தின் செயின்ட் பால் நகரில் நடைபெற்ற முக்கிய போராட்டத்தில் பிரபல பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் கலந்துகொண்டு பாடல்கள் பாடி தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

மேலும், அமெரிக்காவைத் தாண்டி லண்டன், பாரிஸ், பெர்லின், ரோம் உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களிலும் இந்த ‘No Kings’ போராட்டங்களுக்கு ஆதரவாக ஊர்வலங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், இந்தப் போராட்டங்களை “டிரம்ப் மீதான வெறுப்புப் பிரச்சாரம்” என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.