;
Athirady Tamil News

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!

0

அமெரிக்காவைச் சார்ந்த பெரும் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை நிறுவனங்களைக் குறிவைத்து ஏப். 1 முதல் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் புரட்சிகர காவல் படை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ நிலைகள் அமைந்துள்ள இடங்கள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்கி வருகிறது. அதேபோல், ஈரானிலுள்ள உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல், அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகச் சுட்டிக்காட்டி, இதையடுத்து இனிமேல் இந்நிறுவனங்களே தங்களது முதன்மை இலக்குகளாகத் தாக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள 18 நிறுவனங்களின் பட்டியலில் மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள், இண்டெல், ஐபிஎம், டெஸ்லா, போயிங் உள்பட முக்கிய பெரு நிறுவனங்களும் அடங்கும். ஈரானிய நேரப்படி, ஏப். 1 இரவு 8 மணியிலிருந்து(இந்திய நேரப்படி இரவு 10 மணி) தாக்குதல்கள் ஆரம்பமாகும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது ஈரான். ஆகவே, அங்குள்ள ஊழியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளது ஈரான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.