;
Athirady Tamil News

அமெரிக்கக் கல்வி நிலையங்களுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!

0

அமெரிக்கா தனது தாக்குதலுக்கு பகிரங்க மன்னிப்பு கோரவில்லை என்றால், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் லெபனானில் உள்ள அமெரிக்கக் கல்வி நிலையங்கள் ‘முறையான இலக்குகளாக’ (Legitimate Targets) மாற்றப்படும்” என ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது.

மினாப் பள்ளி மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை (Pentagon) நடத்திய முதற்கட்ட விசாரணையில், அது ஒரு ‘தவறான இலக்கு’ (Targeting Error) என்பது தெரியவந்துள்ளது.

மாணவர்கள் மீது ஒரு துளி ரத்தம் பட்டாலும் விளைவுகள் பாரதூரமாகும்
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பள்ளி ஒரு ராணுவத் தளத்தின் பகுதியாக இருந்த பழைய வரைபடத் தரவுகளைப் பயன்படுத்தி அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

எனினும் , உண்மையில் அது தற்போது ஒரு பொதுப் பள்ளியாகச் செயல்பட்டு வந்ததை அமெரிக்க உளவுத்துறை கவனிக்கத் தவறியுள்ளது.

இந்தத் தவறுக்காக சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், ஈரானின் பதிலடி மிரட்டலால் அபுதாபியில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகம் (NYU Abu Dhabi) உள்ளிட்ட பல நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஈரானியத் தளபதிகள் விடுத்துள்ள எச்சரிக்கையில், “அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வளாகங்களில் இருந்து குறைந்தது ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு வெளியேற வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இது ஒரு நேரடித் தாக்குதலுக்கான முன்னெச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் இந்தத் திடீர் மிரட்டலால் ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் தங்கள் உயிருக்கு அஞ்சி சொந்த நாடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

மார்ச் 30, 2026-ஆம் தேதியான இன்றுடன் ஈரான் விதித்த காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கக் கல்வி மையங்களில் பாதுகாப்பு உச்சக்கட்டமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், “ஈரான் தனது எல்லைகளை மீறுகிறது; எங்கள் மாணவர்கள் மீது ஒரு துளி ரத்தம் பட்டாலும் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும்” என்று எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.