;
Athirady Tamil News

அரச அலுவலகங்களிற்கு வழங்கப்பட்ட புதன்கிழமை விடுமுறை ரத்து !

0

நாட்டில் எரிபொருள் நெருக்கடியால் அரச அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக அத்தியாவசிய திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், அரச சேவைகள் வழக்கமான முறையில் அனைத்து வார நாட்களிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டததி அடுத்து அரச அலுவல்கங்களுக்கு புதன் கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.