;
Athirady Tamil News

10 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஈராக் – சிரியா எல்லை: ஹார்முஸ் முடக்கத்திற்கு மாற்றுப் பாதையா..?

0

பாக்தாத்,

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போர் நீடித்தது. கடந்த 7-ந்தேதி இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் விளைவாக, உலகம் முழுவதும், குறிப்பாக ஆசியாவில், கடுமையான எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் போர் காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஈராக் மற்றும் சிரியா இடையேயான எல்லை கடக்கும் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதன்படி சிரிய உள்நாட்டுப் போரினால் 2011-ல் மூடப்பட்ட ராபியா (ஈராக்) மற்றும் யருபியா (சிரியா) எல்லைப் பகுதிகள், இரு நாட்டு அதிகாரிகளின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

இது ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையே கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த முக்கிய எல்லை கடப்புப் பகுதியாகும். போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ள நிலையில், அதற்கு மாற்றாக சிரியா வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்ய, வர்த்தகம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தனது தேசிய வரவுசெலவு திட்டத்தில் ஏறக்குறைய 90 சதவீதம் எண்ணெய் வருவாயை சார்ந்துள்ள ஈராக்கிற்கு, இந்த முன்னேற்றம் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

மீண்டும் இந்த எல்லை திறக்கப்பட்டதைக் குறிக்கும் விழாவின் போது, ​​சுமூகமான போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக, ஒருங்கிணைப்பில் சாத்தியமான மேம்பாடுகள் குறித்து ஈராக் மற்றும் சிரிய அதிகாரிகள் விவாதித்தனர். இந்த எல்லை திறப்பு, அண்டை நாடுகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சியையும் ஒத்துழைப்பையும் வளர்க்கக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகப் பாராட்டப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.