;
Athirady Tamil News

மட்டக்களப்பின் பிரபல ஹோட்டலுக்கு சீல் ; விதிக்கப்பட்ட அபராதம்

0

மட்டக்களப்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை இரண்டு வார காலத்துக்கு சீல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டுட்டுள்ளது.

மேலும் குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஆய்வாளர்களால் மேற்குறித்த ஹோட்டல் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னரே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஹோட்டலுக்கு இதற்கு முன்னர் இரு தடவைகள் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.