;
Athirady Tamil News

பதற்றத்தில் இலங்கை !!

0

இதுவரை நடந்தது என்ன?

காலி முகத்திடலில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் மீது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து அந்தப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது.

அலரி மாளிகையில் இன்று(09) காலை பிரதமரை சந்தித்த ஆதரவாளர்கள் அதனை தொடர்ந்து காலி வீதியில் அமைக்கப்பட்டிருந்த மைனாகோகம பகுதியில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அப்பகுதியிலிருந்த கூடாரங்களையும் அகற்றியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமரின் ஆதரவாளர்கள் கோட்டாகோகம பகுதிக்கு சென்று அங்கிருந்த கூடாரங்கள் சிலவற்றை அகற்றியிருந்ததுடன் சில கூடாரங்களை தீயிட்டு கொளுத்தியிருந்தனர்.

இதனையடுத்து, அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் கட்டுப்டுத்துவதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் அழைக்கப்பட்டனர்.

பதற்ற நிலையை தணிப்பதற்கு கண்ணீர்ப்புகை பிரயோகமும் நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, முதலில் மேல் மாகாணத்திலும் பின்னர் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.