;
Athirady Tamil News

இரும்புக் கம்பிகளுக்கு நுழைந்து வெளியேறும் மக்கள் !!

0

கொழும்பில் முக்கிய வீதிகள் பலவற்றின் ஊடாக பயணிக்க முடியாத வகையில், இரும்புக் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ​பொதுமக்களுக்கு கூட நடந்து செல்லமுடியாது.

வேறு வழிகளின் ஊடாக நடந்துவந்து இரும்புக் கம்பி வே​லிக்கு அருகில் சிக்கிக்கொள்ளும் மக்கள், இரும்புக் கம்பி ​வேலிகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியில் நுழைந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை, அந்த வீதிகளில் எந்தவொரு வாகனமும் பயணிக்க முடியாது. அம்புலன்ஸ் வண்டிகளுக்கு கூட பயணிக்க முடியாத வகையில், வீதிகள் இரும்பு வேலிகளைக் கொண்டு பின்னப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.