;
Athirady Tamil News
Daily Archives

8 February 2024

வியட்நாமில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்!

வியட்நாமின் கோன் தும் மாகாணத்தில் புதன்கிழமை தொடர்ந்து ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோன் தும் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 அலகுகளாக பதிவானது. நிலநடுக்கம் சுமார் 8.1 கி.மீ ஆழத்தில் பதிவானதாக…

இலங்கைக்கு வருகை தந்த மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி

மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இதேவேளை இலங்கையின் பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவையும் இராணுவத் தளபதியையும் அவர் இன்று (08)…

ஹோட்டலில் வெற்றி துரைசாமி… சிசிடிவி காட்சிகள் வெளியீடு… நடந்தது என்ன?

வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கும் முன்பாக ஹோட்டல் ஒன்றில் இருந்து உணவு அருந்திவிட்டு வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்…

வைத்தியரை கடத்திச் சென்று ஆசிரியர் செய்த செயல்!

மிட்டியாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு வைத்தியர் ஒருவரை கடத்திச் சென்று 40 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் மிட்டியாகொட பிரதேசத்தை சேர்ந்த…

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பொலிஸார் பணி இடைநீக்கம்

கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடமை நேரத்தில் அலட்சியமாக இருந்ததன் குற்றச்சாட்டில் மூன்று பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 13 ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி மற்றும் இரண்டு பொலிஸ்…

பிலிப்பின்ஸில் நிலச்சரிவு: 6 போ் மரணம்; 46 போ் மாயம்

பிலிப்பின்ஸின் தெற்குப் பகுதியில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ள கிராமமொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 போ் பலியாகினா்; 46 பேரைக் காணவில்லை. மாயமானவா்களில் 27 போ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகளில் அமா்ந்திருந்த சுரங்கத்…

நுவரெலியா மத்திய நிலையத்தில் குறைவடைந்துள்ள மரக்கறிகளின் விலைப்பட்டியல்

நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளின் விலைகள் இன்று (2024.02.08) காலை முதல் குறைவடைய ஆரம்பித்துள்ளது. கடந்த காலங்களில் நுவரெலியாவில் நிலவி வந்த மரக்கறி வகைகளின் தட்டுப்பாடுகள் படிப்படியாக குறைந்து வருகின்றது.…

பிரான்ஸிலிருந்து இலங்கை வந்த சொகுசு கப்பல்

பிரான்ஸில் இருந்து லீ ஜெகியுஷ் (Le Jacques) என்ற அதிசொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இன்று காலை முதல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. 130 சுற்றுலாப்பயணிகள் மற்றும் 120 பணியாளர்களுடன்…

ஆசிரியர்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை: வெளியாகப்போகும் புதிய சுற்றறிக்கை

தென் மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், தாங்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களிடம் பணம் வசூலித்து அவர்களை உதவி வகுப்புகளுக்கு அழைத்து வருவதற்கு தடைவிதித்து புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பான…

காசாவில் உள்ள கனேடியர்கள் வெளியேற தடை :கனடா அமைச்சர் கடும் கோபம்

காசாவில் இருந்து வெளியேறும் கனேடியர்களின் குடும்பங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய அமைச்சர் தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள 1,000 பேரின் பட்டியலை இஸ்ரேல் மற்றும் எகிப்திய அதிகாரிகளுக்கு கனடா வழங்கிய ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர்கள்…

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரிக்க தனிப்படை அமைப்பு

சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டுளள்து. சென்னையில் அண்ணாநகர், ஜெ.ஜெ. நகர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும்…

தெற்காசியாவிலேயே அதிக கூடிய மின்சார கட்டணம் கொண்ட நாடாக இலங்கை

தெற்காசிய நாடுகளிலேயே அதிகளவான மின்கட்டணத்தை இலங்கையர்கள் செலுத்துவதாக வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, தெற்காசிய நாடுகள் சாதாரணமாக செலுத்தும் மின்கட்டணத்தின் 3 வீதமான தொகையை இலங்கயைில் உள்ளவர்கள் செலுத்துவதாக…

அரச ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

7 லட்சத்துக்கும் மேற்பட்ட அரச ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஓய்வூதியர்கள் தெரிவித்துள்ளனர். சில அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்று ஓராண்டுக்கு மேலாகியும், ஓய்வூதியத் துறை அதைத் தயாரிப்பதில் காலதாமதம் செய்து…

யாழில். டெங்கு பரவும் சூழல் – 07 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 07 குடியிருப்பாளர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் , டெங்கு ஒழிப்பு பணிகளும்…

யாழ்.சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் , அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்க பல்வேறு தரப்புக்களும் தீர்மானித்து…

இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி வடக்கு ஆளுநரை சந்தித்த சாவற்காட்டு கடற்தொழிலாளர்கள்

தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் சாவற்காட்டு மீனவர்கள் வடக்கு மாகாண ஆளுநரை இன்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.…

என் தந்தைக்கு நீங்கள் ஆதரவாக அனுப்பிய செய்திகளுக்கு நன்றி! உருக்கத்துடன் பேசிய இளவரசர்…

மன்னர் சார்லஸின் நலம் விரும்பிகளுக்கு இளவரசர் வில்லியம் நன்றி தெரிவித்துள்ளார். அறக்கட்டளைக்கு வருகை புற்றுநோயால் மன்னர் சார்லஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இளவரசர் வில்லியம் லண்டனின் ஏர் ஆம்புலன்ஸ் அறக்கட்டளைக்கு…

நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்!

நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அரசு கையகப்படுத்தும் நிலத்துக்கான இழப்பீட்டு தொகை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை நொய்டா விவசாயிகள்…

வவுனியா துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங் கோரல்!

வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள்…

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று(08.02.2024) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

நெடுந்தீவில் 19 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவுகைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள்…

யாழில். வீதி மின்குமிழ்களை திருடியவர்களை தடுத்த பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீது…

வீதி மின் விளக்குகளை களவாட முயன்ற கும்பலை தடுக்க முற்பட்ட , சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் , சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம் - சாவகச்சேரி…

யாழை வந்தடைந்துள்ள தென்னிந்திய பிரபலங்கள்

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ள ஹரிகரனின் இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பிரபலங்கள் குழுவொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. யாழ்ப்பாண சர்வதேச விமான…

ஈரானுக்கு பேரிடி : துணை இராணுவ தளபதி ட்ரோன் தாக்குதலில் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரான் ஆதரவுடைய துணை இராணுவத் தளபதி கொல்லப்பட்டார். ஈரான் ஆதரவு கட்டாய்ப் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த அபு பக்கீர் அல்-சாதி என்ற தளபதியே கொல்லப்பட்டதாக அதிகாரிகள்…

டீசல் விற்பனை: எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.3 இழப்பு

டீசல் விற்பனையால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.3 இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய எரிபொருள் சந்தையில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான்…

ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க செந்தில் தொண்டமான் பரிந்துரை

HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பரிந்துரை விடுத்துள்ளார். உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDE) கற்கைநெறியை நிறைவு செய்துள்ள…

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 19 இந்திய கடற்றொழிலாளர்கள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் சிறிலங்கா கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர்.…

அதிபர் ரணில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க நள்ளிரவு 2.00 மணியளவில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை(9) மற்றும் நாளை மறுதினம்(10) இடம்பெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பயணித்துள்ளதாக அதிபர்…

பொது போக்குவரத்தில் பாலியல் சீண்டல்; அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்

பொது போக்குவரத்த்தின்போது பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை பாலியல் சீண்டலில்,ஈடுபட்ட 42 பேர் நேற்று (7) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும்…

காவல் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் : வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட சந்தேக நபர்கள்

ஆட்டுபட்டிதெரு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு இனந்தெரியாத ஒருவரால் விஷம் கலந்த பால் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இருவரும் மயக்கமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள் : சினிமா பாணியில் வைத்தியம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் சுகாதார அமைச்சராக இருந்த போது இறக்குமதி செய்த மருந்துகளே சிறைச்சாலை வைத்தியசாலையில் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.…

பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்புகள்: பலர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குறித்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளளன. அதன்போது, நாட்டின்…

மலையக மார்க்கத்திலான புகையிரத சேவை தொடர்பில் வெளியான தகவல்

மலையக மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு - கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று உலப்பனை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது. இதனையடுத்து, மலையக மார்க்கத்தில்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஏற்பட்ட நிலை:நோயாளர்கள் பெரும் அவதி

தொண்டை முதல் வயிறு வரையிலான நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் (எண்டோஸ்கோபி) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள 10 இயந்திரங்களில் எட்டு இயந்திரங்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு…