;
Athirady Tamil News
Monthly Archives

March 2025

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் உண்மையை கண்டறிய வேண்டும் ; நளின் பண்டார சூளுரை

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி அந்த முகாம்கள் உருவானமைக்கான காரணமாக இருந்த விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். நீதி வழங்கல் ஒருதலைபட்சமாக அமைய கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற…

அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் நியமிப்பு

பொலன்னறுவை மருத்துவமனையின் இயக்குநர் டொக்டர் எச்.எம்.ஐ.யு. கருணாரத்ன, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை மருத்துவமனையில் தற்போது பணியாற்றி வரும்…

தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; நண்பர்களுக்கு இடையே ஏற்பபட்ட மோதலில் ஒருவர் பலி

மட்டக்களப்பில் நண்பர்களுக்கு இடையே ஏற்பபட்ட மோதலில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை குறித்த சம்பவம் நேற்று (14) மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு பதில் ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, பரீட்சார்த்திகளுக்காக நாளை (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளிட்ட மாகாண…

கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு

கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி (Mark Carney) பதவியேற்றார். Bank of Canada மற்றும் Bank of England என இரண்டு மிகப்பெரிய நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநராக இருந்த மார்க் கார்னி, கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்றுள்ளார். லிபரல்…

காலநிலை உச்சி மாநாடு: சாலை அமைக்க அமேசான் காடுகளில் வெட்டப்பட்ட 1,000 மரங்கள்!

கால நிலை உச்சி மாநாட்டுக்காக அமேசான் காடுகளில் 1000 அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் கடுமையான எதிர்ப்பு வலுத்துள்ளது. பிரேசிலில் நடைபெறவுள்ள காலநிலை உச்சி மாநாட்டுக்கு சாலை அமைப்பதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டப்பட்டுள்ள…

ஹிஜாப் விவகாரத்தில் செயலி, சிசிடிவி, டிரோன் மூலம் கண்காணிக்கும் அரசு: ஐநா அறிக்கை!

ஹிஜாப் விவகாரத்தில் அந்நாட்டுப் பெண்களை நவீன முறைகளில் ஈரான் அரசு கண்காணிப்பதாக ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டில் பெண்கள் கட்டாயம் தலையை மறைத்து ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. மேலும், இந்த சட்டத்தை மீறுவது…

பசி, வலி, சோர்வு இல்லாத இளம்பெண் – உலகில் ஒருவருக்கே உள்ள அரியவகை நோய்

பசி, வலி, சோர்வு இல்லாத உலகில் ஒருவருக்கே உள்ள அரிதான நோயால் இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். வலி இல்லாத பெண் அடிபட்டால் வலியில்லாமல் இருக்கவே அனைவரும் விரும்புவார்கள். அதேபோல் இங்கிலாந்தின் ஹடர்ஸ்ஃபீல்டைச் சேர்ந்த Olivia Farnsworth என்ற…

ட்ரம்பின் வரி விதிப்புகளால் ஜேர்மனிக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பு

தனது வரி விதிப்புகள் மூலம் உலகையே கதிகலங்கச் செய்துகொண்டிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப். கனடா, மெக்சிகோ, பிரித்தானியா முதலான நாடுகள், ட்ரம்பின் வரி விதிப்பால் பரபரப்பாகிவரும் நிலையில், தற்போது, ஜேர்மனியிலும் ட்ரம்பின் வரி…

யார் இந்த ரொட்ரிகோ டுட்டெர்டே?-

guardian முன்னாள் ஜனாதிபதியான இவர் தன்னை பற்றி பெருமிதமாக பேசிக்கொள்வதில் விருப்பம் உள்ளவர். தனது இளம் வயதில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன்குற்றவாளிகளை தேடியலைந்ததையும்,16 வயதில் ஒருவரை கத்தியால் குத்திக்கொன்றதையும் அவர்…

அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய பின்னர், எதிர்வரும்…

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 30 மணி நேர மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது எப்படி?

இஸ்லாமாபாத்: பலூச் விடுதலைப் படையினர் நடத்திய ரயில் கடத்தல் சம்பவம் 30 மணி நேரத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. இதில் ரயில் பயணிகளில் 21 பேரும், பாதுகாப்புப் படையினர் 4 பேரும் உயிரிழந்ததாக…

பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கான நடமாடும் சேவை

இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்களுக்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (14.03.2025) காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணி வரை மாவட்டச் செயலக…

பிரித்தானிய பெண் பயணிக்கு டெல்லியில் நடந்த துயரம்: இன்ஸ்டாகிராம் நண்பரால் காத்திருந்த…

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பெண் பயணியை டெல்லியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய சுற்றுலா பயணிக்கு நேர்ந்த துயரம் இந்தியாவில் சுற்றுலா மேற்கொண்டு வந்த…

குரங்குகளை எண்ண விடுமுறை கேட்ட எம்.பி

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் தோட்டங்களுக்கும் வன விலங்குகள் வருவதால் அவற்றினை கணக்கெடுப்பதற்காக நாளை தினம் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை வழங்குமாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க நாடாளுமன்றத்தில்…

ரமலான்: 10 லட்சம் ஆடுகளை இறக்குமதி செய்கிறது அல்ஜீரியா!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் அல்ஜீரியாவின் தேவைக்கு ஏற்ப 10 லட்சம் ஆடுகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக, அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். ஞாயிறன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, அல்ஜீரியா…

பட்டலந்த விவகாரம்; ரணில் எடுத்த முடிவு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளது. பாராளுமன்றில் இன்று (14) அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.…

பேரிச்சம்பழம் ஆரோக்கியம் தான்: ஆனால் அதிகமாக சாப்பிட்டால் இந்த நோய் வரும்

பேரிச்சம்பழம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தருகின்றது. இதில் பல வகையான சத்துக்கள் காணப்படுகின்றது. இது உடலின் ம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆனால், பேரீச்சம்பழம் சாப்பிடுவதாலும் பல தீமைகள் உள்ளன. இது…

உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம்: ரஷ்யா முன்வைத்த சில முக்கிய நிபந்தனைகள்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா சில முக்கிய நிபந்தனைகளை முன் வைத்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யா சில முக்கிய போர் நிறுத்த நிபந்தனைகளை…

ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததை ஒப்புக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட், ஆயிரக்கணக்கானவர்களை கொன்ற வழக்கில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சட்டவிரோத போதைப்பொருள் தெற்காசிய நாடான பிலிப்பைன்சில் சட்டவிரோத போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கும் முயற்சியில்…

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 58.8ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (14) அதிகாலை 04.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்று வீதியில் நிறுத்தி…

மோசமான வேலை செய்த ஆணும் பெண்ணும் அதிரடியாக கைது!

அரசாங்க வேலைகளை வழங்குவதாகக் கூறி , மக்களை ஏமாற்றி 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இலஞ்சம் பெற்ற ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு…

பதவியை இராஜினாமா செய்த அமைச்சர் சாலி நழீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார். கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும்,…

திருகோணமலை பெண்கள் கொலையில் 15 வயது சிறுமி கைது

திருகோணமலை மூதூரில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்களின் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை…

ஆணவக்கொலை: காதல் விவகாரத்தில் மகளின் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை!

குஜராத்தில் வேறு சாதியைச் சேர்ந்த நபரைக் காதலித்ததற்காக மகளின் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபக் ரத்தோட். இவரது மனைவி உயிரிழந்துவிட்டார். தீபக் ரத்தோட் சமீபத்தில் தனது…

மலையைத் தகர்த்து ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் கட்டிய அரண்மனை! விடியோ

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ருஷிகொண்டா மலையின் பெரும்பகுதியை இடித்துத் தகர்த்து, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அதில் ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனையை கட்டியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த…

வரலாற்றின் பெரிய கிரிப்டோ கொள்ளையை செய்த வட கொரியா ஹேக்கர்கள்

வட கொரியா ஹேக்கர்கள் 1.5 பில்லியன் டொலர் கிரிப்டோ நாணயத்தை கொள்ளையடித்துள்ளனர். ரூ.13,000 கோடி கிரிப்டோ கொள்ளை வடகொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள் வரலாற்றிலேயே அதிக அளவிலான கிரிப்டோவை கொள்ளையடித்துள்ளனர். இவர்களின் பின்னணியில் வட கொரிய அரசு…

2024 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியானது

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற பாடசாலைகளை…

முல்லைத்தீவு விபத்தில் யாழ் இளைஞர் உயிரிழப்பு

முல்லைத்தீவு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் நேற்று உயிரிழந்துளார். யாழ் போதனா வைத்தியசாலையில் சிற்சை பெற்று வந்த நிலையில் சிகிற்சை பலனின்றி நேற்றிரவு இளைஞன்…

சிறை அதிகாரி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்…

வரி விதிப்பு விவகாரம்: பிரித்தானியாவை ஏமாற்றிய ட்ரம்ப்

கனடா முதல் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரிகள் விதித்து வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்கா சென்று ட்ரம்பை சந்தித்தபின், பிரித்தானியா வரி…

எட்டு வயது மகளை 23ஆவது மாடியிலிருந்து வீசியெறிந்த தாய்: அடுத்து தொடர்ந்த பயங்கரம்

தனது எட்டு வயது மகளை 23ஆவது மாடியிலிருந்து தூக்கி எறிந்த பெண்ணொருவர், தானும் குதித்து தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தாய் செய்த பயங்கரச் செயல் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள Panvel என்னு நகரில்…

கணவர் வெளிநாட்டில் ; தமிழர் பகுதியில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை

திருகோணமலை மூதூர் - தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 15 வயது மகள் வெட்டு காயங்களுடன்…

இரவு நேர சேவையில் இருந்து விலகும் GS உத்தியோகத்தர்கள்!

இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக அவர்கள் சேவையில் இருந்து விலகுவதாக கூறப்படுகின்றது. இது…