;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

ஜப்பானில் மீண்டும் வெடித்த எரிமலை : விமான சேவைகள் இரத்து

ஜப்பானில் 13 மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை வெடித்துச் சிதறியதால் அங்கு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு உள்ளன. எரிமலைகள் அதிகம் காணப்படும் ஜப்பானில் எப்போது எரிமலை விழித்து,நெருப்பு பிழம்புகளை உமிழத் தொடங்கும் என்று தெரியாது.…

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு ; பலியான தம்பதியினர்

அம்பாந்தோட்டை தங்காலை - உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். மேலதிக விசாரணை இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ ரக துப்பாக்கியை…

திருகோணமலைக்கு ஞானசார தேரர் விஜயம்; பொலிஸார் மீது பாச்சல்

பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்தார். திருகோணமலைப் பகுதியில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அமலாக்க நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்ட…

42 இந்தியர்களை பலிகொண்ட கோர விபத்து ; ஒருவர் மட்டும் உயிர்பிழைத்த அதிசயம்

சவுதி அரேபியாவில்பேருந்தும் ஒன்றும் டீசல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவின் மதீனா அருகே, மக்காவிலிருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகளை…

மஹிந்தவுக்கு பிறந்தாநாள் வாழ்த்து கூறிய இந்திய உயர்ஸ்தானிகர்

இன்று 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு , இந்திய கொன்சியுலர் நாயகம் ஸ்ரீ ஹர்விந்தர் சிங் இன்று (18) காலை, தங்காலையில் 'கால்டன்' இல்லத்துக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர்…

ஊசி போதைப்பொருள் விற்ற கும்பல் சிக்கியது

ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (18) கைதுசெய்யப்பட்டுள்ளது. மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட…

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (18) மாலை 04.00 மணி…

எத்தனை ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்களின் மனதில் மாற்றம் வராது.

எத்தனை நூற்றாண்டுகள் , எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பௌத்த, சிங்கள சித்தாந்தங்களை மனோபாவங்களை இந்த மண்ணில் இருந்து அகற்றமுடியாது என்பதனையே திருகோணமலை சம்பவம் எடுத்து காட்டியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன்…

அமெரிக்கா மிகவும் பாலியல் ரீதியிலானது ; சர்ச்சையை கிளப்பும் மிட்செல் ஒபாமாவின் கருத்து

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியாக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்று ட்ரம்ப் ஜனாதிபதியாக…

பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானம் வாங்குகிறது உக்ரைன்

பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் உள்பட ராணுவ உபகரணங்கள் வாங்க உக்ரைன் விருப்பம் தெரிவித்து, பிரான்ஸ் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோர் ஒப்பந்தங்களில்…

ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்… டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம்…

டெல்லியின் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல் மொத்த நாட்டையும் உலுக்கியுள்ள நிலையில், ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ட்ரோன்களை பயன்படுத்த காஸா எல்லையில் இஸ்ரேலுக்கு…

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர், சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய…

மன்னாரில் இருந்து இராமேஸ்வரம் சென்ற டொல்பின்கள்

கடந்த தினங்களில் மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது தைம்ழகத்தின் இராமநாதபுரத்திற்கு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இராமநாதபுரம் , தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்ற நிலையில் இன்று…

T20 இல் விளையாட அழைப்பு ; யாழ் இளைஞனுக்கு கிடைத்த கிடைத்த அரிய வாய்ப்பு

பாகிஸ்தானில் நடைபெறும் T20 முத்தரப்பு தொடருக்கான தேசிய ஆண்கள் அணியில் இடம்பெறுவதற்காக விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ‘ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் இலங்கை ‘ஏ’ அணியில் இடம்…

பாலஸ்தீன தேசத்துக்கான எதிா்ப்பில் மாற்றமில்லை: பெஞ்சமின் நெதன்யாகு

டெல் அவீவ்: பாலஸ்தீன தேசம் உருவாக்கப்படுவதை எதிா்க்கும் தனது நிலைப்பாட்டில் துளியும் மாற்றம் இல்லை என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் 20 அம்ச போா் நிறுத்த…

பத்து வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை

பத்து வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இராணுவ வீரருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்க , மொனராகலை மேல் நீதிமன்ற நீதவான் நலிந்த ஹேவாவசம் கடந்த வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டார்.…

இதுவரை பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் 03 மாதத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும்…

முதியோர் பராமரிப்பு சேவை தொடர்பான மூன்று நாள் பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (18.11.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…

கரீபியன் கடலில் அமெரிக்காவின் போர் கப்பல் ; அதிகரிக்கும் போர் பதற்றம்

அமெரிக்காவின் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு விமானம் தாங்கிக் கப்பல் கரீபியன் கடலை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 12,000 துருப்புக்களையும் , விமானங்களையும் உள்ளடக்கிய இந்த கப்பல் கரீபியன் கடற்பகுதிக்கு வருகை தந்துள்ளதன் மூலம்…

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘‘மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு அக்டோபர் 24-ல் திருமணம்…

யாழ் பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் மாற்று அவயவத் திட்டம்: இரண்டாம் கட்டமாக 35 மாற்றுத்…

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளது. கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ் பல்கலைக் கழகம் முன்னெடுக்கும்…

எஸ்பெஸ்டாஸ் அபாயம்; அவுஸ்திரேலியாவில் 69 பாடசாலைகளை மூட உத்தரவு

எஸ்பெஸ்டாஸ் அச்சத்தால் அவுஸ்திரேலியாவில் 69 பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிறுவர்களுக்கான வண்ண விளையாட்டு மணல் (Coloured Play Sand) பொருட்களில் எஸ்பெஸ்டாஸ் (Asbestos) என்ற ஆபத்தான இரசாயன பொருள் கலந்திருப்பது…

துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதி – பாலம் சரிந்து விழுந்து 32 பேர் உயிரிழப்பு

சுரங்கத்தின் பாலம் சரிந்ததில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். கோபால்ட் சுரங்கம் மின்சார வாகனங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் - அயன் பேட்டரிகளில் முக்கிய அங்கமாக இருக்கும் கோபால்டை உலகளவில் அதிகம் உற்பத்தி…

விமான நிலையத்தில் கைவிட்டப்பட்ட சூட்கேசில் 110 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தொலைந்து போன பொதிகள் அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட ஒரு சூட்கேஸில், ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்க இயக்குநருமான சந்தன புஞ்சிஹேவா…

கடுமையான மூடுபனி; ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பயணிப்போர் அவதானம்

ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தற்போது கடுமையான மூடுபனி நிலைமை நிலவுவதால் சாரதிகள் மிக அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மோசமான வானிலை காரணமாக வீதியில் போக்குவரத்து…

வெள்ளத்தில் மூழ்கிய சுன்னாகம் பொலிஸ் நிலையம்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக சுன்னாகம் பொலிஸ் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சுன்னாகத்தில் தனியார் காணிகளில் இயங்கி வந்த பொலிஸ் நிலையம் கடந்த வருடம் நவம்பர் மாதம் தொடக்கம் புதிய இடத்தில் இயங்கி…

ஷேக் ஹசீனாவுக்கு எதிரான தீர்ப்பு பற்றி இந்தியா கருத்து

புதுடெல்லி, சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்தாத கூறப்பட்ட குற்றச்சாட்டில், வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்துள்ளது. மரண தண்டனைக்கு ஷேக் ஹசீனா எதிர்ப்பு…

மரண தண்டனை: தீர்ப்பு ஒருதலைபட்சமானது; அரசியல் நோக்கம் கொண்டது! – ஷேக் ஹசீனா

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு ஒருதலைபட்சமானது, அரசியல் நோக்கம் கொண்டது என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அறிக்கை வெளியிட்டுள்ளார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில்…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி; மனைவி சடலமாக மீட்பு

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் நேற்று (17) வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, கணவன் காணாமல் போயுள்ளார். வெலிமடை பிரதேசத்தில் பெய்த அதிக மழை காரணமாக தம்பதியினர்…

கொழும்பில் இருந்து வந்த புகையிரத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவைக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

யாழில். அதிக மழை – 14 பேர் பாதிப்பு ; 04 வீடுகள் சேதம்

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் , மழையினால் 14 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் , யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.…

டெல்லி கார் வெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

புதுடெல்லி டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது. விசாரணை மிகத்தீவிரமாக…

ஒரே நாளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உள்ளிட்ட மூவர் பலி

நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன கடற்கரையில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எகொடஉயன…

அரிசி மூட்டைகளுடன் தடம்புரண்ட லொறி ; தமிழர் பகுதியில் சம்பவம்

வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. 17ஆம் திகதி…

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியுள்ளது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து பெஷாவருக்கு ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. இந்த நிலையில் ரயிலை…