;
Athirady Tamil News

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு..!!

0

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 2 வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏராளமான பகுதிகள் ெவள்ளத்தில் தத்தளித்தன. தற்போது மழை ஓய்ந்துள்ளதால் வெள்ளம் வடிந்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டன. தற்போது மழை குறைந்துள்ளதால் அணைகளுக்கு சீரான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

வினாடிக்கு 32,987 கனஅடி தண்ணீர்

124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை நிலவரப்படி 124.46 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16,279 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 17,987 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில், முழு கொள்ளளவில் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,786 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் 32,987 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அகண்ட காவிரியாக தமிழகத்துக்கு செல்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.